தலைவர் பதவிக்கு வர ஸ்டாலினுக்கு நீண்ட நாள் ஆசை... டி.ராஜேந்தர் பரபரப்பு தகவல்
சேலம்: திமுக தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்பது ஸ்டாலினின் நீண்ட நாள் ஆசை என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் டி.ராஜேந்தர் கூறுகையில் நான் அரசியல்வாதி என்பதை விட ஆன்மிகவாதி. லட்சிய திமுகவை தொடங்கி 14 ஆண்டுகள் முடிந்து விட்டது வனவாசம் முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்.
ஆன்மிக ரீதியில் சிந்தித்து
15 ஆண்டு தொடக்கத்தை விடிவு காலமாக பார்க்கிறேன். புதிய கட்சி தொடங்குவோருக்கு பொறுமை இருக்கிறதா. ஆன்மிக ரீதியில் சிந்தித்து பதிலளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
என்ன விசேஷம்
எனக்கு எல்லா ஊர்களும் எங்கிருக்கிறது என்பது எனக்கு தெரியும். தமிழ்நாட்டின் அனைத்து பகுதியையும் அறிந்தவன் நான். செயலை எடுத்துவிட்டு தலைவராகிவிட்டார் ஸ்டாலின். இதில் என்ன விசேஷம் இருக்கிறது?
மகன் என்ற முறையில்
தலைவர் பதவிக்கு வர ஸ்டாலினுக்கு நீண்ட நாள் ஆசை இருந்தது. தலைமைக்கு புலமை மட்டும் போதாது, பொறுமை வேண்டும். கருணாநிதி போராடிதான் தலைவர் ஆனார். ஆனால் ஸ்டாலின் மகன் என்ற முறையில் தலைவராகிவிட்டார்.
தீவிர அரசியல்
தலைவர் பதவி என்பது சுட்டெரிக்கும் நெருப்பு. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்கள் காலத்திலேயே அரசியல் செய்துவிட்டேன். தற்போதுள்ளவர்களுடன் அரசியல் செய்தவதில் எந்த கஷ்டமும் இல்லை. இனி தீவிர நேர அரசியலில் ஈடுபடுவேன் என்றார்.