ஜெயலலிதா அனுமதியோடு வீடியோ பதிவு - ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த சசி
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ளார் சசிகலா.
Recommended Video
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை அவரது அனுமதியுடன் வீடியோ எடுத்ததாக சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு, 2016ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற போதும் எடுக்கப்பட்ட வீடியோக்களுடன் சேர்த்து மொத்தம் 4 வீடியோ பதிவுகளை ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ளார் சசிகலா.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் வெளியுலக மக்கள் யாராலும் அவரை பார்க்க முடியவில்லை. டிசம்பர் 6ஆம் தேதியன்று காலையில் அவரது சடலத்தைத்தான் மக்கள் பார்த்தனர்.
ஜெயலலிதா உடனே கூட இருந்த சசிகலா ஆறுமுகசாமி ஆணையத்தில் தனது தரப்பு வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தது பல நடந்த பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 22ஆம் தேதியன்று பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்தோம். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதா, ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர்கள் ஓபிஎஸ், சி.விஜயபாஸ்கர், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கண்ணாடி வழியாக பார்த்தனர்.வேறு அறைக்கு மாற்றும்போது நிலோபர் கபில் உள்பட ஒரு சில அமைச்சர்கள் பார்த்தனர்.
ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது அவரது அனுமதியுடன் வீடியோக்கள் எடுத்தோம். அந்த வீடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றார். 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சிகிச்சை பெற்ற போதும் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. இந்த 4 வீடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ளார் சசிகலா.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.