For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஏர்போர்ட் அறிவிப்பு பலகையில் தமிழ் நீக்கம்.. காலையில் மட்டும் என விமான நிலையம் விளக்கம்!

சென்னை விமான நிலைய வருகை, புறப்பாடு அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஏர்போர்ட் அறிவிப்பு பலகையில் தமிழ் நீக்கம்..ஏன்?- வீடியோ

    சென்னை : சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.

    தமிழ் மொழியை சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது முதல் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு கைவிரித்துவிட்டது.

    இந்நிலையில் தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயமாக சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் இதுவரை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன.

    அறிவிப்பில் இருந்து தமிழ் நீக்கம்

    அறிவிப்பில் இருந்து தமிழ் நீக்கம்

    ஆனால் நேற்று முதல் தமிழ் மொழியில் வரும் அறிவிப்பானது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மட்டுமின்றி பயணிகளை அழைத்து செல்ல விமான நிலையம் வருவோரும் தங்கள் மொழியில் அறிவிப்பு இல்லாததால் அவதிக்கு ஆளாகினர்.

    மக்களுக்காகவே தமிழ் மொழியில்

    மக்களுக்காகவே தமிழ் மொழியில்

    அந்தந்த மாநில மக்கள் பயன்பெறும் வகையில் தகவல்களை இந்தி, ஆங்கிலம் அல்லாது மாநில மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அதற்கும் விமான நிலையம் தடை போட்டிருப்பது ஏன் என்று பயணிகள் கொந்தளிக்கின்றனர்.

    விமான நிலைய இயக்குநர் விளக்கம்

    விமான நிலைய இயக்குநர் விளக்கம்

    இந்நிலையில் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கம் ஏன் என்று சென்னை விமான நிலைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். தாமதத்தை தவிர்க்கவே தமிழ் மொழியில் வெளியிடப்படும் அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    தாமதத்தை தவிர்க்க

    தாமதத்தை தவிர்க்க

    காலை நேரத்தில் அதிக அளவில் விமான போக்குவரத்து இருப்பதால் அந்த நேரத்தில் 3 மொழியில் அறிவிப்பு வருவதால் பயணிகள் தகவல்களை தெரிந்து கொள்ள தாமதம் ஏற்படுவதாக இயக்குநர் கூறியுள்ளார். இதனால் காலை நேரத்தில் மட்டும் இந்தி, தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடப்படாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Announcements in Chennai aiport about the arrival and departure details of flights in Tamil removed from Chennai airport, passengers suffered a lot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X