For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் மாதம் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்... பிப்ரவரியில் வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று முடிவாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று முடிவாகி இருக்கிறது. இந்த தேர்தலுக்காக பிப்ரவரியில் வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது.

தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. பார் கவுன்சிலுக்கான தலைவர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

Tamil Nadu Bar Council election on March 28

இப்போது இருக்கும் பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று தேர்தல் நிர்வாக குழு அறிவித்துள்ளது.

மேலும் பிப்ரவரி 1ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 15 வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஆகும். அதேபோல் பிப்ரவரி 22 வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். மார்ச் 1ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் நிர்வாக குழு தெரிவித்து இருக்கிறது.

English summary
Tamil Nadu Bar Council election will be held on March 28. February 1 is the date for nomination, February 15 is the last date for nomination. February 22 is the last date to revoke the nomination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X