பசுமை வீடு திட்டம்.. கட்டுமான செலவு ரூ. 2.10 லட்சமாக உயர்வு.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: பசுமை வீடு திட்டத்திற்கான கட்டுமான செலவு ரூ. 2.10 லட்சமாக தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் உயர்த்தி உள்ளது.
கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டித்தரப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டித்தருவதற்காக அரசு சுமார் ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதற்கான மொத்த செலவு தொகை ரூ.2,10,000 ஆக இருக்கிறது. ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000/- சூரிய சக்தி விளக்கிற்கான தொகை ரூ. 30,000, மொத்தம் ரூ. 2,10,000 ஆக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பசுமை வீடுகளுக்கான கட்டுமானத் தொகையை ரூ. 2,10,000 கோடியாக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த 5 அறிவிப்புகள்.. மிக முக்கிய திட்டங்களை வெளியிட்ட அதிமுக.. 2021ல் கோட்டையை பிடிக்க ஸ்கெட்ச்!
கிராமப் பகுதிகளில் வீடு இல்லாத, வீட்டு மனை பட்டா உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளுக்கு ரூ. 6,754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.