தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்... சட்டசபையிலும் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று அறிவிக்கப்பட்டது.
லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை அமைப்பாகும்.
தமிழகத்தில் 15-வது சட்டசபையை தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. கடந்த ஜுன் மாதம் கூடிய முதல் சட்டசபை கூட்டத் தொடரில். ஆளுநர் ரோசைய்யா உரையாற்றினார்.
தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும் ஊழலை ஒழிக்கவும் ஏதுவாக லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என ஆளுநர் தன் உரையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு சட்டசபையில் 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பல்வேறு நலத்திட்டங்ளை அறிவித்த போது, லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதிஅமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.