11ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை.. தமிழக அரசு அறிவிப்பு!
11ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 11ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் ரேங்க் ஒழிப்பு முறையை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யோசிப்பதற்குள்ளேயே அடுத்த அறிவிப்பாக 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த பரிசீலித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான தேர்வுகளை கருத்தில் கண்டு இந்த முடிவு எடுக்க உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மற்ற மாநில மாணவர்களுடனான போட்டிக்கு தமிழக மாணவர்களை தயார்ப்படுத்தும் விதமாக தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.