தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் விரிவாக்கம்.. 312 புதிய சிகிச்சை முறைகள் சேர்ப்பு
தமிழக அரசின் காப்பிட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில், புதிதாக 312 சிகிச்சை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை: தற்போது நடைமுறையில் உள்ள தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 312 புதிய சிகிச்சை முறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1.50 லட்சம் ரூபாயை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், தமிழக அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்கும் குறைவாக உள்ள குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறலாம்.