தமிழக இடைக்கால பட்ஜெட் 2016
-ஜெ.க்கு புகழாரம் சூட்டி பட்ஜெட் உரையை நிறைவு செய்த ஓபிஎஸ்
-தமிழக அரசுக்கு மொத்த வருவாய் வரவுகள் - ரூ1,52,004.23 கோடி
-மொத்த வருவாய் செலவினங்கள்- ரூ1,61,159.01 கோடி
-நிதியாண்டு வருவாய் பற்றாக்குறை ரூ9,154.78 கோடி
-கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ108 கோடி நிதி ஒதுக்கீடு
-5 ஆண்டுகளில் 8 லட்சம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன
-சைக்கிள்கள் வழங்க ரூ64 கோடி நிதி ஒதுக்கீடு
-5 ஆண்டுகளில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ரூ3,607 கோடி கல்வி உதவித் தொகை
-மாணவர்களுக்கு இலவசமாக 37 லட்சம் லேப்டாப்புகள் வழங்கப்பட்டுள்ளன
-5 ஆண்டுகளில் 8600 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது
-மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 127 % நிதி கூடுதலாக ஒதுக்கீடு
-இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழகம்
-சமூக நலத்துறைக்கு ரூ. 3,820 கோடி; சுற்றுலாத்துறைக்கு ரூ. 84.66 கோடி ஒதுக்கீடு
-போக்குவரத்து துறைக்கு ரூ. 1590 கோடி; உயர் கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி ஒதுக்கீடு
-விளையாட்டு துறைக்கு ரூ.142.88 கோடி; தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152.27 கோடி ஒதுக்கீடு.
-அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் நலனுக்காக ரூ. 19,841 கோடி ஒதுக்கீடு.
-ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ. 2702.22 கோடி- பழங்குடியினர் நலனுக்காக ரூ. 261.66 கோடி ஒதுக்கீடு.
-மாநில மொத்த உற்பத்தியில் கடன் 19% மட்டுமே
-2016-17-ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உயரும்
-மத்திய அரசின் நிதிபங்கீட்டு முறை மாற்றியமைப்பால் ரூ2,000 கோடி கூடுதல் நிதிசுமை
-முதல் கட்டமாக சென்னை பெருநகர மாநகராட்சியில் ஸ்மார்ட் கார்டு மூலம் அம்மா குடிநீர் திட்டம்
-தமிழக அரசின் கடன் ரூ2,47,031 கோடியாக இருக்கும்
-அரசின் நிதிப்பற்றாக்குறை அடுத்த ஆண்டில் ரூ9,000 கோடியாக இருக்கும்
-உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ2,42,000 கோடி முதலீட்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது
-உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 4.73 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
-ஜெ. முயற்சியால் சென்னை- பெங்களூர் தொழில் வழித்தடத்தில் பொன்னேரி இணைப்பு
-விற்பனை வரி குறைவால் தமிழக அரசுக்கு ரூ4 ஆயிரம் கோடி இழப்பு
-5 ஆண்டுகளில் 1510 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்
-மின்மிகை மாநிலம் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது
-5 ஆண்டுகளில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன
-அம்மா திட்டங்களால் விலைவாசி உயர்வில் இருந்து தமிழக மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்
-அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு மத்தியில் இருந்த காங். அரசுதான் ஒப்புதல் தரவில்லை- ஓபிஎஸ்
-அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனே செயல்படுத்த ஜெ. உத்தரவு- ஓபிஎஸ்
2051 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை
-காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது
-மாநிலத்துக்கு உள்ளே பாயும் நதிகளை இணைக்க திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
-மீனவர் நலனுக்கு ரூ742 கோடி ஒதுக்கீடு
-கச்சத்தீவை மீட்டு தமிழர் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவோம்
-ரூ231 கோடியில் 60,000 கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன
-7 லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன
-சென்னை வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு
-சுகாதாரத் துறைக்கு ரூ9,350 கோடி நிதி ஒதுக்கீடு
-மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ1,032 கோடி நிதி ஒதுக்கீடு
-5 ஆண்டுகளில் 28 லட்சம் வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன
-மின்சார துறைக்கு ரூ13,819 கோடி நிதி ஒதுக்கீடு
-போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன- ஓபிஎஸ்
-அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை- ஓபிஎஸ்
-10,000க்கும் மேலான இசேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க சாதனை- ஓபிஎஸ்
-அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆரம்ப கட்டப் பணிகள் உடனே தொடங்கப்படும்: ஓபிஎஸ்
-அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த திருத்திய கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்
-இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழரை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்- ஓபிஎஸ்
-வனத்துறைக்கு ரூ677.93 கோடி நிதி ஒதுக்கீடு- ஓபிஎஸ்
-ஈழத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- ஓபிஎஸ்
-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது: ஓபிஎஸ்
-நில அபகரிப்பு சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளனர்- பட்ஜெட்டில் ஓபிஎஸ்
-இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ6,938.57 கோடி நிதி ஒதுக்கீடு
-மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு
-இடைக்கால பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ6,099 கோடி நிதி ஒதுக்கீடு
-தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ32.74 கோடி நிதி ஒதுக்கீடு
-புதுவாழ்வுத் திட்டத்துக்கு உலக வங்கி ரூ900 கோடி நிதி- ஓபிஎஸ்
-இடைக்கால பட்ஜெட்டில் ரூ60,610 கோடி நிதி ஒதுக்கீடு
-மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100 கோடி ஒதுக்கீடு
-நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது: ஓபிஎஸ்
-5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது- ஓபிஎஸ்
-ஆடு, மாடு வழங்கியது உள்ளிட்ட அதிமுக அரசின் இலவச திட்டங்களை பட்டியலிட்டார் ஓபிஎஸ்
-இடைக்கால பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை: முக ஸ்டாலின்
-இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தார்மிக உரிமை அதிமுக அரசுக்கு இல்லை- ஸ்டாலின்
-5 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது- இடைக்கால பட்ஜெட்டில் ஓபிஎஸ்
-மின்பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: ஓபிஎஸ்
-காங்கிரஸ், இ.கம்யூ எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் வெளிநடப்பு
-சட்டசபையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு
-சட்டசபையில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
-பட்ஜெட் உரையில் வழக்கம் போல ஜெ.க்கு ஓபிஎஸ் புகழாரம்
-தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது
-நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்