கடத்தப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளர் மீட்பு...மர்ம கும்பல் தப்பியோட்டம்!!
உடுமலை: உடுமலையில் கடத்தப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். அவரை இன்று உடுமலை எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்தியபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் இன்று காலை 11 மணியளவில் கடத்தப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உடுமலைப்பேட்டை, அன்சாரி வீதியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கர்ணன் இருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக கர்ணனை இழுத்துச்சென்று காரில் ஏற்றியது. அப்போது அதில் ஒருவர் அவரை தாக்கியதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
Recommended Video
எம்எல்ஏ அலுவகத்திற்குள் பட்டப்பகலில் நுழைந்து அவரது உதவியாளரை ஒரு கும்பல் கடத்திச் சென்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்த உடுமலை டி.எஸ்.பி.,ரவிக்குமார் அதிரடி விசாரணையில் இறங்கினார். இந்த நிலையில், தளி அருகே வாளவாடியில் கடத்தப்பட்ட கர்ணனை இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
தகவல் அறிந்த காவல்துறையினர் கர்ணனை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தியவர்களையும் தேடும் பணியும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.