For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்... ஷூ, செருப்புக்கு தடை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.

By Vazhmuni
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. இந்த தேர்வில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகளுகள் தேர்வு எழுத 2,427 தேர்வு மையங்களும், 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழு அமைப்பு

கண்காணிப்பு குழு அமைப்பு

தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடத்துவார்கள்.

மாணவர்களுக்கு கட்டுப்பாடு

மாணவர்களுக்கு கட்டுப்பாடு

ஒவ்வொறு மாவட்டத்திலும் தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள் மற்றும் 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையங்களில் செருப்பு, ஷூ, டை, செல்போன் உள்ளிட்டவைகளை எடுத்து வர அனுமதி கிடையாது.

ஹால் டிக்கெட்

ஹால் டிக்கெட்

தேர்வு எழுதும் மாணவர்களின் ஆள்மாறாட்டத்தை தடுக்க ஹால் டிக்கெட் , விடைத்தாள் மற்றும் வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம்பெறுகிறது.

புகார்களுக்கு

புகார்களுக்கு

பொதுமக்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் .

English summary
Tamil Nadu state board exams for Class 12 will begin on tomorrow. Class 12 exams will begin with language paper 1 on March .The major papers will begin for third group and fourth group students on March 10 with the commerce exam, while for the students of science group, it begins with chemistry on March 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X