தமிழக அரசின் 9 பி.ஆர்.ஓக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழக அரசின் மக்கள் தொடர்பு அலுவலர்கள் என்னும் பி.ஆர்.ஓக்கள் 9 பேரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.ஆர்.லிங்கம் அரியலூர் பி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் பி.ஆர்.ஓ. ஆர்.மதியழகன் கடலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாகவும், கடலூர் மாவட்ட பி.ஆர்.ஓ. கு.தமிழ்செல்வராஜன் தூத்துக்குடி மாவட்ட பி.ஆர்.ஓ.வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்.ஓ. அ.செந்தில் மதுரை மாவட்ட பி.ஆர்.ஓ.வாகவும், சென்னை வணிக வரித்துறை ஆணையரக பி.ஆர்.ஓ. மாயகுமரேசன், திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட பி.ஆர்.ஓ. கலையரசன், கலைவாணர் அரங்க பி.ஆர்.ஓ.வாகவும், தூத்துக்குடி மாவட்ட பி.ஆர்.ஓ. பாஸ்கரன், திருவண்ணாமலை மாவட்ட பி.ஆர்.ஓ.வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏ.பி.ஆர்.ஓ.) எஸ்.உதயா கதிரவன், சென்னை வணிக வரித்துறை ஆணைய பி.ஆர்.ஓ.வாகவும், சேலம் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ. இளங்கோ, கன்னியாகுமரி மாவட்ட பி.ஆர்.ஓ.வாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.