அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உள்ளாட்சித் தேர்தல்... அக்டோபர் 2வது வாரத்தில்?
சென்னை: கட்சிகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 2 வாரத்தில் நடைபெறலாம் என்று தகவல் வருகிறது. அனேகமாக அடுத்த வாரமே தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதி முடிவடைகிறது. புதிய பிரதிநிதிகள் 25ம் தேதி பதவியேற்க வேண்டும். எனவே 24ம் தேதிக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
இதனால் உள்ளாட்சித் தேர்தலை அந்தத் தேதிக்குள் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே தொடங்கி விட்டன. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த நிலையில் அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கலெக்டர்களுடன் ஆலோசனை
மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் ஒவ்வொரு மாவட்ட கலெக்டருடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரித்து பட்டியல் சரி பார்க்கும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஆளுக்குப் பாதி
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வருவதால் எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்கள் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

முன்னாடி 2 ஓட்டு
இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் விவரமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதுவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் கவுன்சிலரை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு, மேயர் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு என 2 ஓட்டு போட்டனர்.

இப்ப ஒரு ஓட்டு போதும்
தற்போது இதில் மாற்றம் வந்து விட்டது. அதாவது மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கு மக்கள் இனி வாக்களிக்கத் தேவையில்லை. மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க உள்ளதால் இனி மக்கள் ஒரு ஓட்டு போட்டால் போதும்.

25க்குள்
புதிய உறுப்பினர்கள் அக்டோபர் 25-ந்தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்பதால் அதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. அனேகமாக அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

வியூகங்கள் ரெடி
தேர்தல் நெருங்கி விட்டதால் கட்சிகளிடமும் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள ஆளுங்கட்சி முயலும். அதை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுக்கும் என்பதால் மீண்டும் ஒரு பரபரப்பான காலத்திற்கு தமிழகம் செல்லப் போகிறது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications