அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உள்ளாட்சித் தேர்தல்... அக்டோபர் 2வது வாரத்தில்?
சென்னை: கட்சிகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 2 வாரத்தில் நடைபெறலாம் என்று தகவல் வருகிறது. அனேகமாக அடுத்த வாரமே தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதி முடிவடைகிறது. புதிய பிரதிநிதிகள் 25ம் தேதி பதவியேற்க வேண்டும். எனவே 24ம் தேதிக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
இதனால் உள்ளாட்சித் தேர்தலை அந்தத் தேதிக்குள் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே தொடங்கி விட்டன. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த நிலையில் அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கலெக்டர்களுடன் ஆலோசனை
மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் ஒவ்வொரு மாவட்ட கலெக்டருடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரித்து பட்டியல் சரி பார்க்கும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஆளுக்குப் பாதி
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வருவதால் எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்கள் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

முன்னாடி 2 ஓட்டு
இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் விவரமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதுவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் கவுன்சிலரை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு, மேயர் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு என 2 ஓட்டு போட்டனர்.

இப்ப ஒரு ஓட்டு போதும்
தற்போது இதில் மாற்றம் வந்து விட்டது. அதாவது மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கு மக்கள் இனி வாக்களிக்கத் தேவையில்லை. மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க உள்ளதால் இனி மக்கள் ஒரு ஓட்டு போட்டால் போதும்.

25க்குள்
புதிய உறுப்பினர்கள் அக்டோபர் 25-ந்தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்பதால் அதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. அனேகமாக அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

வியூகங்கள் ரெடி
தேர்தல் நெருங்கி விட்டதால் கட்சிகளிடமும் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள ஆளுங்கட்சி முயலும். அதை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுக்கும் என்பதால் மீண்டும் ஒரு பரபரப்பான காலத்திற்கு தமிழகம் செல்லப் போகிறது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications