For Quick Alerts
For Daily Alerts
Just In
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தமிழில் 69 பேர், சமூக அறிவியலில் 61,115 பேர் செண்டம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 69 பேர் தமிழில் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் யாரும் முழு மதிப்பெண்கள் பெறவில்லை.
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சமூக அறிவியலில் 61, 115 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 69 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் விபரம் :
தமிழ் - 69 பேர்
கணிதம் - 13,759 பேர் கடந்த ஆண்டை விட இது குறைவுதான்.
சமூக அறிவியல் - 61,115 பேர் இது கடந்த ஆண்டை விட அதிகம்.
அறிவியல் - 17,481 பேர் கடந்த ஆண்டை விட இது குறைவுதான்.
ஆங்கிலத்தில் யாரும் 100 மதிப்பெண்கள் பெறவில்லை. அதிக கெடுபிடியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மொழி பாடங்களில் முழு மதிப்பெண்களை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியலில் அதிக அளவில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
English summary
The number of centums in maths, science and social science. 17,481 students got centums science subject this year.61,115 students got centums in Social Science.