For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிதம்பரம் கோயிலை காப்பாற்ற கோரி போராட்டம்- சிவனடியார் ஆறுமுகசாமி கைது

By Mathi
Google Oneindia Tamil News

 Sivanadiyar Arumugasamy
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து காப்பாற்றக் கோரி போராட்டம் நடத்திய சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்து கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சிவனடியார் ஆறுமுகசாமி, சிதம்பரம் கோயில் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரப் பாடல்களை பாடி போராட்டம் நடத்தினார். ஆனால் தீட்சிதர்களோ கோயிலை பூட்டியாக வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் போலீசாரையும் அழைத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து பிற்பகலில் சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் 30 பேரை போலீசார் கைது செய்து கோயில் நடையை சாத்தினர்.

English summary
Tamil scholar Sivanadiyar Arumugasamy, who was arrested after the protest to demand save to the Chidambaram Nataraja temple from the Dikshidars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X