சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தவாகவினர் போராட்டம்
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
சென்னை: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் இன்றும் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை வைக்கக் கூடாது என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அதையும் மீறி போட்டி நடைபெற்றால் மைதானம் அருகே போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். மேலும் நேற்றைய தினம் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினார்.
தற்போது சேப்பாக்கம் மைதானம் அருகில்
— Nizam (@Nizam27147801) April 10, 2018
பலூன் பறக்க விட்டு போலீசுக்கும் அரசுக்கும் எதிர்ப்பு விளையாட்டு காட்டும் தமிழர்கள் #CSK #IPL2018 #ChepaukStadium #CauveryIssue #CSKvKKR #CauveryMangementBoard #IPL11 #CSKReturns pic.twitter.com/WZc3Ek7X8c
எனினும் இன்று போட்டி நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 4000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு இன்றும் போராட்டம் நடத்தினர்.