தமிழறிஞர் அறிவொளி காலமானார்.. இன்று மாலை இறுதிச்சடங்கு
தமிழறிஞர் அறிவொளி காலமானார், அவருக்கு வயது 80.
Recommended Video
திருச்சி: தமிழறிஞர் அறிவொளி காலமானார், அவருக்கு வயது 80.
தமிழறிஞர் அறிவொளி நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்தவர். 1986ல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு திருச்சி மருத்துவமனையில் தமிழறிஞர் அறிவொளியின் உயிர் பிரிந்தது.
120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் அறிவொளி. பட்டிமன்ற நடுவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். ஆன்மிக இலக்கிய சொற்பொழிவாளரும் ஆவார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அறிவொளி.
இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஹனீபா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.