சங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்!
சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சங்கரின் மரணத்தால் அவரது பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சங்கரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.தென்னாட்டு ஏழைஎளிய நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவுகளாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறதுகுடும்பத்திற்குபாஜகஇரங்கல்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) October 12, 2018
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தென்னாட்டு ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவுகளாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது. குடும்பத்திற்கு பாஜக இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.
[ ஒரு ரூபாய் கூட வாங்காமல் என்னை ஐஏஎஸ் ஆக்கியவர் சங்கர்.. தமிழகத்தை உலுக்கிய ஒரு மரணம்! ]