காவிரி நதி நீர் விவகாரம்... அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழிசை வலியுறுத்தல் #cauvery
நெல்லை: காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நெல்லை சென்ற தமிழிசை சவுந்திரராஜன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்ட கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை" என்றார்.
மேலும், காவிரி விவகாரத்தில் தாமதமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோல், காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.