வாழும் மகாத்மா வாஜ்பாய் கவலைக்கிடம் நெஞ்சை உலுக்குகிறது... தமிழிசை உருக்கம்
Recommended Video
சென்னை: வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது நெஞ்சை உலுக்குகிறது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை நேற்று தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் பூரண நலம் பெற பிரார்த்திப்பதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மரியாதைக்குரிய முன்னாள் பாரத பிரதமர், வாழும் மகாத்மா மிக சிறந்த ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கிய, நம் அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் திரு. வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது. (1/2)
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 16, 2018
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறுகையில் மரியாதைக்குரிய முன்னாள் பாரத பிரதமர், வாழும் மகாத்மா மிக சிறந்த ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கிய, நம் அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் திரு. வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
அவர் நலம் பெறுவது தான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பது தான் உண்மை, அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்நேரத்தில் நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை நடத்துவோம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.