சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள்.. விடாமல் மல்லுக்கட்டும் தமிழிசை!
சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடிக் கொடுத்துள்ளார்.
சென்னை: சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடிக் கொடுத்துள்ளார்.
ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தற்கு பாஜக தான் காரணம் என தினகரன் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கூறினார்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு வழங்கியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
சின்னப்பிள்ளைகள்தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவர் முயற்சி செய்யாத ஒன்றை
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 24, 2017
முயற்சி செய்ததாக சொல்வது முதிர்ச்சியின்மைதானே https://t.co/Zikukeupu0
அதாவது இரட்டை இலைச்'சின்னம்' பாஜக வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என டிவிட்டரில் குறிப்பிட்டார் தமிழிசை சவுந்தரராஜன். இதற்கு டிவிட்டர் வாயிலாகவே பதில் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 'சின்ன'ப்பிள்ளைகள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள் என்றார்.
இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு தமிழிசை மீண்டும் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சின்னப்பிள்ளைகள்தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். முயற்சி செய்யாத ஒன்றை
முயற்சி செய்ததாக சொல்வது முதிர்ச்சியின்மைதானே என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.