For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள்.. விடாமல் மல்லுக்கட்டும் தமிழிசை!

சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடிக் கொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடிக் கொடுத்துள்ளார்.

ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தற்கு பாஜக தான் காரணம் என தினகரன் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கூறினார்.

Tamilisai responded to Thirunavukarasar that Children only will speak immaturely.

அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு வழங்கியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்தார் தமிழிசை சவுந்தரராஜன்.

அதாவது இரட்டை இலைச்'சின்னம்' பாஜக வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என டிவிட்டரில் குறிப்பிட்டார் தமிழிசை சவுந்தரராஜன். இதற்கு டிவிட்டர் வாயிலாகவே பதில் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 'சின்ன'ப்பிள்ளைகள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள் என்றார்.

இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு தமிழிசை மீண்டும் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சின்னப்பிள்ளைகள்தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். முயற்சி செய்யாத ஒன்றை
முயற்சி செய்ததாக சொல்வது முதிர்ச்சியின்மைதானே என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Tamilisai responded to Thirunavukarasar that Children only will speak immaturely. Thirunavukarasar said Children speak truth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X