For Daily Alerts
Just In
எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு: அரசின் சுயநல நடவடிக்கை... தமிழிசை கண்டனம்
தமிழக அரசின் சுயநலத்தையும், எம்எல்ஏக்களை தக்க வைக்கும் முயற்சி தான் ஊதிய உயர்வு நடவடிக்கை என பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்காமல் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தியிருப்பது சுயநலமானது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
ஓகி புயலில் காணாமல் போன சென்னை காசிமேடு மீனவர் தேவாவின் வீட்டிற்க்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசிய அவர், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு குறித்து பேசிய அவர், அவர்களை தக்க வைத்துக்கொள்ள அதிமுக அரசு எடுத்த சுயநலமான முடிவு இது என்று குறிப்பிட்டார்.
Comments
English summary
Tamilisai says that MLA Salary hike is Selfish Act by TN govt. She said that its an retaining effort of MLAs.
Story first published: Thursday, January 11, 2018, 18:43 [IST]