ராகுல் காந்தி தமிழை வைத்து பிழைப்பு நடத்த பார்க்கிறார்- தமிழிசை பதிலடி
ராகுல் காந்தி தமிழை வைத்து பிழைப்பு நடத்த பார்க்கிறார் என்று தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: ராகுல் காந்தி தமிழை வைத்து பிழைப்பு நடத்த பார்க்கிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்றதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. நேற்று அதன் நிறைவு நாளின்போது ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்குண்டு என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். தமிழ் மக்கள் மீது மாற்று மொழியை திணிக்கின்றனர் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசை ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ராகுல் காந்தி தமிழை வைத்து பிழைப்பு நடத்த பார்க்கிறார் என்றார்.