For Quick Alerts
For Daily Alerts
Just In
சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை பாரதம் இழந்துவிட்டது.. ஜெயேந்திரர் மறைவுக்கு தமிழிசை இரங்கல்
சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் | Oneindia Tamil
சென்னை: சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மூச்சுதிணறல் காரணமாக சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சைப்பலனின்றி ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், ஜெயேந்திரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
Comments
English summary
Tamilisai Soundararajan condoles for Jayendra saraswathi death. Jayendra Saraswathi passes away today.
Story first published: Wednesday, February 28, 2018, 10:41 [IST]