For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐசியூவில் இருந்த பொருளாதாரம் நார்மல் வார்டுக்கு மாறி இருக்கிறது... சொல்றது தமிழிசை!

பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் 2018-19, வரிந்துக்கட்டும் தமிழிசை- வீடியோ

    சென்னை: பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல, இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல இது ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்ஜெட்டுக்கு புதிய விளக்கத்தை தந்துள்ளார். தமிழக ஆட்சி ஐசியூவில் இருப்பதாக கிண்டல் செய்தனர் எதிர்கட்சியினர்.

    ஐசியூ டூ நார்மல் வார்டு

    ஐசியூ டூ நார்மல் வார்டு

    பட்ஜெட்டிற்கு இந்த கருத்தை முடிச்சு போட்டு கருத்து சொல்லியுள்ளார் தமிழிசை. பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல. பொருளாதாரத்தை நார்மல் வார்டுக்கு மாற்றி இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    நாடி நரம்புல ஊறிப்போன டாக்டர்

    தமிழிசையின் இந்த கருத்துக்கு பலரும் டுவிட்டரில் பதில் கருத்துகளை தெறிக்கவிடுகின்றனர். இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம் விரைவில் அதை நடக்க வைப்போம் என்கிறார் தமிழிசை. நாடி நரம்பு சதை இரத்தம் முழுவதும் மருந்துவம் ஊறிப் போன ஒரு டாக்டர்ரால தான் இப்படி பேசமுடியும் என்று கருத்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    இது எந்த மொமண்ட்?

    தமிழிசையின் கருத்தை செந்தில் கவுண்டமணி காமெடியோடு ஒப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ளார் இவர். இதுல எப்படின்னே லைட் எரியும் மொமண்ட் தமிழிசையின் கருத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மக்கள் நோயாளியா?

    இந்த பட்ஜெட் ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல உள்ளது என்று தமிழிசை கூறியுள்ளார். மக்களை நோயாளிங்கனு சொல்லாம சொல்லுறாங்க போல என்று கூறியுள்ளார் இந்த வலைபதிவர்.

    English summary
    TN BJP state secretary Tamilisai says delivering budget is like bringing the patient from ICU to normal ward and now it has been moved slowly government will take steps to stand up.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X