‘செக்’ மூலம் நன்கொடை.. அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ‘செக்’.. பட்ஜெட் குறித்து தமிழிசை கருத்து
2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது மிகச் சிறந்த பட்ஜெட் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிகச் சிறந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறினார்.
பொது வாழ்க்கையில், அரசியலில் தூய்மை என்ற அளவில் செக் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட செக் என்று தமிழிசை கூறியுள்ளார்.
2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக மத்திய பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.