For Daily Alerts
Just In
எடப்பாடி அரசு மக்கள் பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும் - பாமக ஜி.கே மணி அட்வைஸ்!- வீடியோ
எடப்பாடி அரசு உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்.
ஈரோடு: எடப்பாடி அரசு, உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். ஜி.கே.மணி கூறியுள்ளார்.
ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி அரசு தங்கள் உட்கட்சி பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, அந்த பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும்.
விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். ஆனால் குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்பே சட்டமன்றத் தேர்தல் வரும். அந்த தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார் நிலையில் உள்ளது என ஜி.கே மணி கூறினார்.
Comments
assembly election pattali makkal katchi gk mani edappadi palanisamy oneindia tamil video சட்டமன்ற தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி ஜிகே மணி எடப்பாடி பழனிச்சாமி ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
In Tamilnadu assembly election will come very soon told Pmk party leader G.K.Mani in Erode.
Story first published: Friday, June 9, 2017, 17:02 [IST]