For Quick Alerts
For Daily Alerts
Just In
சட்டப்பேரவை மீண்டும் வரும் 14 ஆம் தேதி கூடும்... சபாநாயகர் தனபால் அறிவிப்பு
சென்னை: சட்டசபை மீண்டும், 14ம் தேதி கூடும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 24 ம் தேதி துவங்கியது. நேற்று, தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை, மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், சபை முன்னவர் பன்னீர்செல்வம், அலுவல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையின் அடுத்த கூட்டத்தை, 14 ஆம் தேதி கூட்ட, தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்த கூட்டம், 14ம் தேதி நடைபெறும்' என சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
Comments
English summary
Tamilnadu assembly will convene again on sep 14 th
Story first published: Saturday, September 5, 2015, 2:51 [IST]