For Daily Alerts
Just In
காவிரி விவகாரம்.. திருவண்ணாமலையில் தமிழிசைக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம்
திருவண்ணாமலை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு திருவண்ணாமலையில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலைக்கு இன்று வருகை தந்த தமிழிசை சென்ற பாதையில், ஜல்லிக்கட்டு போராட்ட குழு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர். மத்திய அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் செல்லும் வழிகளில் எல்லாம் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். வரும் 15ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பிக்க திமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary
Tamilnadu BJP president Tamilisai facing black flag protest in Tamil Nadu.
Story first published: Monday, April 2, 2018, 10:52 [IST]