பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குக் கூடுகிறது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. துறை ரீதியாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்குப் பின்னர் மானியக் கோரிக்கை மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு சட்ட மசோதாபற்றியும் ஆலோசிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.