அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்!
சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கிரிஜா வைத்தியநாதன் வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். அரசு மருத்துவமனைகள் தரமானவை என்று என்னதான் அரசு கூறினாலும், அரசியல்வாதிகள் தனியார் மருத்துவமனைகளைதான் நாடுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதன், முன்மாதிரியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தலைமைச் செயலாளர் என்பவர் மாநிலத்திலுள்ள அனைத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தலைமை பொறுப்பில் உள்ளவர்.
இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் உள்ள அதிகாரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளது பிற அதிகாரிகளுக்கும் உத்வேகம் அளிக்க கூடியதாக உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகள் தங்கள் சிகிச்சை தரத்தை மேலும், மேலும் உயர்த்திக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கலாம்.