For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது எப்போது?... அமைச்சர்களுடன் ஆலோசித்த எடப்பாடியார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதியை தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் வந்து பார்வையிட்டும், அஞ்சலி செலுத்தியும் செல்கின்றனர்.

Tamilnadu CM Palanisamy holds meeting with ministers regarding Jayalalitha memorial

நினைவிட வடிவமைப்பு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடி நிதியில் ஒரு வருடத்தில் நினைவிடம் அமைக்கும் பணி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே ஓரிரு நாட்களில் நினைவிட கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamilnadu CM Palanisamy holds meeting with ministers regarding Jayalalitha memorial and within days the structural plan of memorial may released.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X