தி.மு.க.வினர் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு..சந்தீப் சக்சேனா விளக்கம்
சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து தி.மு.க.வினர் நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விளக்கமளித்துள்ளார்.
குற்றச்சாட்டு தொடர்பான எந்த புகாரும் தனக்கு வரவில்லை என சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
கடலூர், புதுச்சத்திரத்தில் ‘நீதி கேட்கும் பேரணி' என்ற பெயரில் தி.மு.க. பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, தமிழகத்தில் வேட்பாளர் பட்டியலில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் பெயர் நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மு.க.ஸ்டாலின் கூறுவது போல் தி.மு.க. உறுப்பினர்கள் நீக்கப்படுவதாக இதுவரை எந்தவித புகார்களும் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை என்றார்.
இது குறித்து புகார் வந்தால், அது தொடர்பான தவறு செய்த தேர்தல் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சக்சேனா கூறினார்.