எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு நடுவே ஆளுநர் உரை.. அரசுக்கு புகழாரம்.. புதிய திட்டங்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதை எதிர்த்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தன.
ஆளுநர் தனது உரையில் கூறியதாவது:
-உரையை நிறைவு செய்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
-ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாகத்தை சபாநாயகர் தனபால் வாசித்து வருகிறார்
-பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க மானியம் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்-ஆளுநர்
-இரு சக்கர வாகன மானிய திட்டத்தில் உதவித்தொகை உச்சவரம்பு ரூ.20,000 இருந்து ரூ.25,000 உயர்வு-ஆளுநர்
-அண்ணா பல்கலை. மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஜப்பான் உதவியுடன் புதிய திட்டங்கள் - ஆளுநர்
-மின்வாரியத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்பட்டுள்ளது - ஆளுநர்
-இதுவரை 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது - ஆளுநர்
-4 தொழிற்பூங்காக்கள் ஜப்பான் உதவியுடன் துவங்கப்பட உள்ளனர்-ஆளுநர்
-உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது-ஆளுநர்
-உலக முதலீட்டாளர் மாநாட்டால் 96341 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய அளவில் 61 திட்டங்களுக்கு ஒப்புதல்-ஆளுநர்
-தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 268 புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்-ஆளுநர்
-காவிரி மேலாண்மை வாரியத்தையும், முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும்- ஆளுநர் உரையில் வலியுறுத்தல்
-2030ம் ஆண்டுக்குள் நிலைத்தக்க இலக்குகளை தமிழகம் எய்திவிடும்- ஆளுநர்
-முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் - ஆளுநர்
-மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையில், சட்ட உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது - ஆளுநர்
-கறவை பசு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் - ஆளுநர்
-2016 -17ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - ஆளுநர்
-ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும் - ஆளுநர்
-சென்னை மெட்ரோ ரயிலின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும்-ஆளுநர்
-இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் வளர்ப்பு பயிற்சி மையங்களை நடத்தி வருகிறோம்-ஆளுநர்
-உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழகம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது-ஆளுநர்
-சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு விரைவில் அனுமதியளிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்-ஆளுநர்
-16 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை ஏற்படப்பட்டுள்ளது-ஆளுநர்
-கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது; மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு - ஆளுநர்
-தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது - ஆளுநர்
பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது - ஆளுநர் -பேச்சு
-ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டுகிறது - ஆளுநர்
-5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் - ஆளுநர்
-தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிக்க தமிழக அரசு திட்டம்-ஆளுநர்
-ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய ரூ.10 கோடி வழங்கிய முதல்வரை பாராட்டுகிறேன்
-தமிழக நலனுக்காக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
-கோதாவரி நீரை காவிரி நதிக்கு இணைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதை வரவேற்கிறோம்
-சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது- ஆளுநர்
-மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் - ஆளுநர்
-பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள், கொள்கைகளை இயற்றி சிறந்த ஆட்சியை தொடர்ந்து வழங்கும் - ஆளுநர்
-கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி தேசிய சாலையாக மேம்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது - ஆளுநர்
-வருவாய் குறைந்த போதிலும் மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
-மாவட்டங்களில் தொழில் முனைதல் மற்றும் ஊரக தொழிலை ஊக்குவிக்க உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும் - ஆளுநர்
-வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது: ஆளுநர்
-கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடர்கிறது- ஆளுநர்
-மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான மீட்பு பணியில் ஈடுபட்டன-ஆளுநர்
-ஓகி புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டது
-முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.401 கோடியும் ரூ.4854 கோடியை நிவாரண நிதியாகவும் வழங்க கோருகிறேன்-ஆளுநர்
-கடைசி மீனவர் மீட்கப்படும்வரை அரசு மீட்பு முயற்சியை தொடரும்- ஆளுநர்