பள்ளி பேருந்து டிரைவர்களை களம் இறக்கும் தமிழக அரசு.. ஸ்ட்ரைக்கை எதிர்கொள்ள நடவடிக்கை!
பள்ளி பேருந்து ஓட்டுநர்களை கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: பள்ளி பேருந்து ஓட்டுநர்களை கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திருத்தணியில் பள்ளி பேருந்து ஓட்டுநர்களை கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்து வருவதால் ஸ்ட்ரைக் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அதன்படி திருத்தணியில் பள்ளி பேருந்து ஓட்டுநர்களை கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் பள்ளி வாகன ஓட்டுநர்கள் தற்போது பணியின்றி இருப்பதால் அவர்களை பயன்படுத்திக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே பணிமனை ஊழியர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற போக்குவரத்து ஊழியர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.