சிபிஎஸ்இ பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளும் அங்கீகார சான்று பெற வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து தனியார் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சார்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.
தமிழக அரசு மேல்முறையீடு
வழக்கில் தனி நீதிபதி மகாதேவன் தமிழக அரசின் அரசாணைக்கு கடந்த ஜூலை 10 - ம் தேதி தடை விதித்திருந்தார். அரசாணை தடைக்கு எதிராக தமிழக அரசு ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
தனிநீதிபதி உத்தரவு ரத்து
அரசின் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை தள்ளுபடி செய்தது.
சான்று பெறவேண்டும்
மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரமும் தமிழக அரசுக்கு உண்டு என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.
தலையிடமாட்டோம்
கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதில் தலையிடமாட்டோம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
அங்கீகாரம் அளிக்க
அதே நேரத்தில் பள்ளிகளை ஆய்வு செய்யவும், அங்கீகாரம் அளிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.