8 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் அசோக் குமார் தாஸ், ஷைலேஷ் குமார் யாதவ், சு.அருணாச்சலம், பி. தாமரை கண்ணன் ஆகிய 4 பேருக்கு கூடுதல் டிஜிபியாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.
அதாவது குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக அசோக்குமார் தாஸ், போக்குவரத்து காவல் ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ், மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபியாக அருணாச்சலம், போலீசார் நலத்துறை கூடுதல் இயக்குநராக ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ராஜீவ் குமார், மகேஷ் குமார் அகர்வால், என் தமிழ்செல்வன், எம்என் மஞ்சுநாதா ஆகிய 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ்குமார் ஊர்காவல்படை ஏடிஜிபியாகவும் சிபிசிஐடி ஐஜியாக மகேஷ்குமார் அகர்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக தாமரை செல்வனும், போலீசார் வீட்டு வசதி வாரிய கூடுதல் இயக்குநராக மஞ்சுநாதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.