Breaking News: கவிதா கைது: ஆதாரங்களை சமர்ப்பிக்க பொன். மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்தது ஏன்? என்று சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும்,
ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் ஹைகோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். கவிதாவுக்கு சம்மன் அனுப்பாமல் கைது செய்தது ஏன் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியதற்கு, தக்க ஆதாரங்கள் இருப்பதால்தான் அவரை கைது செய்ததாக
பொன்மாணிக்கவேல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் மழை பெய்யும்
தமிழகம், புதுச்சேரியில் இயல்பையொட்டி பருவமழை பெய்துள்ளது
கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை தமிழகம், புதுச்சேரியில் 112 மி.மீ மழை பதிவு
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்
அண்ணா நகர் சிஎஸ்ஐ இம்மானுவேல் சர்ச்சின் குறிப்பிட்ட பகுதி இடிக்கப்பட்டது
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சர்ச்சின் ஒரு பகுதியை இடித்தனர்
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடக்கும் போதே இடிக்கப்பட்டது
பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸ் குவிப்பு
ஐஜி பொன்மாணிக்கவேலிடம் ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி
மாஜிஸ்திரேட்டிடம் ஆதாரத்தை காட்டிவிட்டு கைது செய்ததாக ஐஜி பொன்மாணிக்கவேல் பதில்
தகுந்த ஆதாரத்தை காட்ட நீதிபதிகள் ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவு
தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை - ஐஜிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை