For Daily Alerts
Just In
ஜெ. மரணம் பற்றி இனி எப்.பி.ஐ விசாரணை வேண்டுமா? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை கேட்பவர்கள் அடுத்து எப்.பி.ஐ விசாரனை கேட்பார்களா என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை கேட்பவர்கள் அடுத்து எப்.பி.ஐ விசாரணை கேட்பார்களா என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது : சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை கேட்பவர்கள் அடுத்து எஃப்பிஐ விசாரணை கேட்பார்களா?.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிவிசாரணை தேவை என்று சொன்னார்கள் அதை அமைத்துவிட்டோம். நீதி விசாரணை மட்டுமே இதில் போதுமானது என்றும் சண்முகம் கூறியுள்ளார்.
Comments
English summary
State law minister C.V.Shanmugam asks if they ask CBI probe next will they ask FBI inquiry
Story first published: Tuesday, September 26, 2017, 12:07 [IST]