For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

Tamilnadu and Puducherry may have thunder rain

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியல் வெப்பம் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Chennai Meteorological center says Tamilnadu and Puducherry may have rain or thunder rain. Heavy wind will be there in sea area fisherman do not enter into sea fisherman said Meteorological center warns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X