தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் இரவு நேரங்களில் எதிர்பார்க்கலாம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக வெப்பம் நிலவி வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் காற்றின் வேகம் குறைந்திருந்தாலும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக நீலகிரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு