7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னையிலும் பெய்யும்.. ஸ்வீட் தகவல்
சென்னை: தலைநகர் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், நாகை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் மழை குறைந்து வடகிழக்கு பருவமழை நிறைவடைய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் வட கிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை மேலும் சில நாட்கள் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 3 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 2 செ.மீ, சேலம் தம்மம்பட்டியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.