முல்லைப்பெரியாறு பார்க்கிங் பிரச்சனை - தமிழக அரசு மேல்முறையீடு
முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிட விவகாரத்தில் கேரளாவுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது.
சென்னை: முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிட விவகாரத்தில் கேரளாவுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது. கேரளா அந்த பகுதியில் பார்க்கிங் கட்டிக் கொள்ள அனுமதி அளித்து சில நாட்களுக்கு முன் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பெரியாறு பார்க்கிங் பிரச்சனை கடந்த சில மாதங்களாக பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. முதலில் பசுமை தீர்ப்பாயம் முல்லைப்பெரியாறு பகுதியில் பார்க்கிங் கட்டக்கூடாது என தீர்ப்பளித்தது.
அதன்பின் கேரள அரசு மீண்டும் மேல் முறையீடு செய்தது. இதையடுத்து சில நிபந்தனைகளுடன் பார்க்கிங் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து கேரளா அரசு அங்கு பார்க்கிங் காட்டும் பணிகளை தொடங்கியது. தற்போது இதற்கு எதிராக தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. தற்போது தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருக்கிறது.