மாஃபியா ஆட்சியை கலைக்க திமுக மட்டுமல்ல தமிழகமே தயார்.. குஷ்பு
ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாராக உள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை: ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாரக உள்ளது. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? என தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற மறுநாள் குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், "நான் மும்பை சென்று வருவதற்குள் மாஃபியா கும்பல் ஆட்சியை பிடித்துவிட்டதே" என தெரிவிந்திருந்தார்.
இந்த பதிவை பார்த்து, பலர் அவரையும், காங்கிரஸ் கட்சியையும் கிண்டல் செய்து கமெண்ட செய்திருந்தனர். அதற்கு குஷ்பு கோபமடைந்தார். அவர்களுடன் கருத்து மோதலும் நடந்தது.
இந்நிலையில், மிண்டும் மாஃபியா கும்பல் ஆட்சி என்று குறிப்பிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாரக உள்ளது. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? என தெரிவித்துள்ளார்.