நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி முழுமையாக தெரியுமா?... கேட்கிறார் தமிழிசை
சென்னை: நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வு பற்றி எப்படி முழுமையாக தெரியும் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், 'நீட் தேர்வு என்றால் என்னவென்று தெரியாத 6ஆம் வகுப்பு மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்துக்குத் தூண்டிவிடுகின்றனர்.
மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவிற்கு என்ன தெரியும்
நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? சூர்யா போன்றோர் கோடிக்காகப் பணியாற்றும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம்.
கோடிக்காக பணி
சூர்யா போன்றோர் கோடிக்காக பணியாற்றும் போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
|
நாட்டுடமை ஆக்குவாரா?
இதனிடையே திருச்சி பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தலைவர் வீரமணி பேசியதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். திருச்சியில் முழங்கும் வீரமணி அவர்கள் தமிழக மாணவர்களுக்கு உயிரையும் கொடுப்பேன் என்கிறார் வேண்டாம் பெரியார் சொத்துக்களை நாட்டுடைமைஆக்கதயாரா?
|
புரட்டு வெளிப்படும்
கடந்த வரலாற்றைப் புரட்டிப்பாருங்கள் என்று சொல்லும் வீரமணியாரே புரட்டினால் உங்கள் புரட்டுகள் தான் வெளிப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டுள்ளார்.