For Daily Alerts
Just In
விடாமல் பெய்த மழை... புளியரை அருகே குளம் உடைந்தது!
செங்கோட்டை: தமிழக கேரள எல்லை செங்கோட்டை புளியரையில் விடாமல் பெய்த மழை காரணமாக குளம் உடைப்பெடுத்தது.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான பகவதிபுரம் பகுதியில் நேற்று இரவுமுதல் பெய்த பலத்த மழையின் காரணமாக எல்.யெஸ்.காலனி என்றப் பகுதியிலுள்ள முன்னீர்பள்ளம் குளம் உடைந்தது. இதில் சுமார் 50ஏக்கர் விவசாயநிலங்களில் பயிர்கள் சேதமடைந்தது.
மேலும் புளியரை, தாட்கோ நகர் பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் கோமதிசங்கர நாராயணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மழை தொடர்ந்து நீடித்தால் சேதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
English summary
A tank bund was cracked near Puliyarai.
Story first published: Monday, October 27, 2014, 17:15 [IST]