உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாளை மறுநாள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எப்எல்2 மற்றும் எப்எல்3 உரிமம் பெற்ற பார்களையும் கண்டிப்பாக மூட வேண்டும் என்றும், உத்தரவை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி மூன்று நாட்கள் தமிழகமெங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இப்போது மே தினத்தையொட்டி கடைகள் மூடப்படுவதால் சென்னை 'குடிமகன்கள்' கலக்கம் அடைந்துள்ளனர்.