For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை புறநகர்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
சென்னை: சென்னை நகரின் சில பகுதிகளிலும் பலவேறு புறநகர் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் மதுக்கடைகளை மாலை 6 மணிக்கே மூட வேண்டும் வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக மூடப்படும் கடைகளின் ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசு எந்த உத்தரவும் பிறப்பித்ததாக தெரியவில்லை.
இருப்பினும் சென்னையில் பல்வேறு இடங்களில் எலைட் மது பானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்ற கடைகள் திறந்து வழக்கம் போல சரக்கு விற்பனை நடந்து வருகின்றது.
அதேபோல புறநகர்களில் பல இடங்களில் மதுக் கடைகளை மூடி வருகின்றனர். இதனால் குடிக்க வருவோர் குழப்பமடைந்துள்ளனர். சில இடங்களில் குறிப்பிட்ட சிலரே கடைகளை மூட கூறுவதாக சொல்லப்படுகிறது.
Comments
English summary
Tasmac shops has been closed in Chennai and outer. People confused why tasmac closed without reason.
Story first published: Friday, July 27, 2018, 19:10 [IST]