For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'குடி' மகன்கள் கவனத்திற்கு... 17 முதல் 19ம் தேதி வரை புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு லீவு!

புதுச்சேரி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி இரவு வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட அம்மாநில கலால்துறை ஆணையிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக-காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில முதல்வர் நாராயணசாமியும், அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட அம்மாநில கலால்துறை ஆணையிட்டுள்ளது.

tasmac will be closed in pondicherry from 17th to 19th of november

அதன்படி வரும் 17ஆம் தேதி மாலை முதல் 19ஆம் தேதி இரவு 7 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 21ஆம் தேதி மாலை முதல் 22ஆம் தேதி இரவு வரையும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
tasmac shops will be closed in pondicherry from 17th to 19th of this month. on 21st to 22 also tasmac shops will be closed for vote counting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X