மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்து த.வா.க. ஆர்ப்பாட்டம்!
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சென்னை: மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடத்தியது.
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மியான்மர் ராணுவத்தின் இனப்படுகொலைக்கு அஞ்சி 5 லட்சம் மக்கள் வங்கதேச நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்தியாவிலும் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை மியான்மர் அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதற்கு ஐநா மனித உரிமை கவுன்சில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து விமர்சனம் செய்தது.
இந்நிலையில், சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்தும் தஞ்சமடைந்த ரோஹிங்யாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்புவதைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. வள்ளுவர் கூட்டம் முன்பாக அக்கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.